News May 2, 2024

கடலூர் அருகே பெண்கள் மட்டுமே சுமந்து சென்ற தேர்!

image

கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பம் அடுத்த நெல்லிக்குப்பத்தில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சூசையப்பர் ஆண்டு பெருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த நிலையில் நேற்று இரவு ஆலயத்தில் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக இந்த பெருவிழாவில் குழந்தை இயேசு தேர் மற்றும் மாதா தேரை பெண்கள் மட்டுமே தங்களின் தோள்களில் சுமந்து தூக்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 14, 2026

‘அடிமை கூட்டணி’: கடலூர் அமைச்சர் அறிக்கை

image

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை, தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசையும், அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

News March 14, 2026

குடிமைப் பணிகள் தேர்வு -2 ,ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில்
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 15.03.2026 அன்று நடைபெறவுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்
தெரிவித்துள்ளார். தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் இந்த தேர்வில் காலையில் 315 பேரும், மாலையில் 322 பேரும் எழுத உள்ளனர்.
ஹால் டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

News March 14, 2026

கடலூர்: சிறுமி கர்ப்பம்; இளைஞர் மீது வழக்கு!

image

நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டை சேர்ந்தவர் கவிபாரதி (30). இவர் 17 வயதுடைய சிறுமியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினார். இதில் சிறுமி கர்ப்பமானார். பின்னர் பரிசோதனை செய்ய கடலூர் அரசு மருத்துவமனை சென்ற போது, அங்கிருந்த மருத்துவர்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் நேற்று போக்சோ சட்டத்தில் கவிபாரதி மீது வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!