News December 30, 2025
திருத்தணி தாக்குதல் சம்பவம்.. முறைத்ததால் தகராறு: IG

திருத்தணியில் <<18693605>>வடமாநில தொழிலாளியை<<>> கஞ்சா போதையில் சிறுவர்கள் தாக்கிய விவகாரம் குறித்து IG அஸ்ரா கர்க் விளக்கம் அளித்துள்ளார். தாக்குதல் நடத்திய 4 பேரில் 3 பேர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், வடமாநிலத்தவர் என்பதற்காக அல்ல, முறைத்து பார்த்ததால் தகராறு ஏற்பட்டது என்றும் பாதிக்கப்பட்டவர் அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 12, 2026
கரூர் துயரத்திற்கு காரணம் இதுதான்.. விஜய்

கரூர் துயரத்திற்கு தானும், TVK நிர்வாகிகளும் பொறுப்பல்ல என CBI அதிகாரிகளிடம் விஜய் கூறியதாக சொல்லப்படுகிறது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த விசாரணையில் பல கேள்விகளுக்கு விஜய் பதிலளித்தார். அப்போது வேலுச்சாமிபுரத்தில் தேவையற்ற பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காகவே அங்கிருந்து தான் புறப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், கூட்ட நெரிசலுக்கு TN அரசே காரணம் என விஜய் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
News January 12, 2026
இனி டாக்டருக்கு படிக்க தேவையில்லை.. எலான் மஸ்க்

AI-ன் அதிவேக வளர்ச்சி காரணமாக டாக்டருக்கு படிப்பது பயனற்றதாக மாறும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். இவரது இந்த கருத்து SM-ல் விவாதத்தை கிளப்பியுள்ளது. வரும் காலங்களில் அறுவை சிகிச்சை நிபுணர்களை விட, ரோபோக்கள் சிறப்பாக செயல்படும் என கணித்துள்ளார். மேலும், தற்போது அதிபருக்கு வழங்கப்படும் மருத்துவ சேவையை விட சிறந்த சேவை ஒரு சாமானியருக்கும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்குறீங்களா?

உங்கள் குழந்தை எந்த கஷ்டமும் படக்கூடாது என எண்ணி அவர்களை பொத்தி பொத்தி வளர்க்குறீங்களா? உங்கள் ஓவர் பாசம், பிற்காலத்தில் பெரும் பிரச்னையாக மாறும். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் இந்த உலகத்தில் சர்வைவ் ஆவது கடினமாகிறது. அவர்களுக்கு பிரச்னைகளை எப்படி கையாள்வது, சக மனிதர்களை எப்படி புரிந்துகொள்வது போன்ற அடிப்படை விஷயங்கள் தெரியாமல் போய்விடும். எனவே அவர்களை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க. SHARE.


