News December 30, 2025
BREAKING: புதிய ரேஷன் கார்டுகள்.. அரசு அறிவிப்பு

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில், TN அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, 2021-ம் ஆண்டு மே முதல் தற்போது வரை விண்ணப்பித்தவர்களில் 98.23% பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 20.56 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
ஈரான் மீதான தாக்குதலுக்கு தயாரானாரா டிரம்ப்?

ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்த டிரம்ப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இருப்பினும் பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருப்பதாகவும், தெருக்களில் மக்களை கொல்வதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. <<18836892>>ஈரானில்<<>> அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவும், இஸ்ரேலும் போராட்டக்காரர்களை தூண்டிவிடுவதாக அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
News January 13, 2026
உங்களுக்கு இந்த ஃபோபியா இருக்கா?

ஏதோ ஒன்றின் மீது ஏற்படும் அதீத அச்ச உணர்வையே ஃபோபியா என்று கூறுகின்றனர். பயம் பொதுவாக அர்த்தமுள்ளதாக இருக்காது. ஆனால் அதை உணருபவர்களுக்கு அது உண்மையானது. மக்களிடையே பொதுவாக காணப்படும் அச்சங்கள் மற்றும் அதற்கு என்ன ஃபோபியா என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு என்ன பயம் இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.
News January 13, 2026
சுதந்திரத்திற்கு பின் முதல்முறை அலுவலகம் மாறும் PM

நாடாளுமன்றம், மத்திய அரசு அலுவலகங்கள் ₹20,000 கோடியில் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பிரதமர் அலுவலகத்திற்கான (PMO) புதிய கட்டட பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ‘சேவா தீர்த்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில் பொங்கலுக்கு பிறகு PM மோடி பணியை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திரம் பெற்றது முதல் ‘சவுத் பிளாக்’ பகுதியில் இயங்கி வந்த PMO முதல்முறையாக மாற உள்ளது.


