News December 30, 2025
பொங்கல் பரிசுத் தொகை.. புதிய அறிவிப்பு வெளியானது

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்கள் e-KYC சரிபார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என அரசு அறிவித்திருக்கிறது. இந்த e-KYC-ஐ குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்காவிட்டால், ஜனவரி 1-ம் தேதி முதல் உங்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் நிறுத்தப்படலாம். இதனால் பொங்கல் பரிசும் கிடைக்காது என கூறப்படுகிறது. எனவே ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று, e-KYC சரிபார்ப்பை முடிங்க. SHARE.
Similar News
News February 10, 2026
வங்கிக் கணக்கில் ₹2,000.. அரசின் ஹேப்பி நியூஸ்

PM KISAN திட்டத்தின் 22-வது தவணை தொகை (₹2,000) எப்போது வரவு வைக்கப்படும் என காத்திருக்கும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இம்மாத இறுதி (அ) மார்ச் தொடக்கத்தில் தொகையை விடுவிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதனிடையே, 2019 பிப்.1-ம் தேதிக்கு பிறகு நிலம் வாங்கிய விவசாயிகளை திட்டத்தில் இருந்து விலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
News February 10, 2026
முதலீடு செய்ய பிட்காயின் சிறந்தது: கியோசாகி

தங்கத்தை விட பிட்காயினில் முதலீடு செய்வதே தனது முன்னுரிமையாக இருக்கும் என்று முன்னணி முதலீட்டாளர் ராபர்ட் கியோசாகி கூறியுள்ளார். தங்கம், பிட்காயின் இரண்டிலும் முதலீடு செய்வது சிறந்தது என்றாலும், எனது தேர்வு பிட்காயினாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பிட்காயின்களை 21 மில்லியனுக்கு மேல் உருவாக்க முடியாது என்பதால் அதன் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
News February 10, 2026
தமிழக தேர்தல் தேதி… ECI வெளியிட்ட முக்கிய அப்டேட்

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. 5 மாநில தேர்தல் தேதி ஒரே நேரத்தில்தான் அறிவிக்கப்படும். இந்நிலையில், மேற்குவங்கத்தில் SIR பணிகளுக்கு பின் வாக்காளர் இறுதிப்பட்டியல் பிப்.28-ல் வெளியாகும் என சற்றுமுன் ECI அறிவித்துள்ளது. இதன்பிறகே, 5 மாநில தேர்தல் தேதியை ECI வெளியிடும். தமிழகத்தில் <<19077197>>ஏப்.13-ல் தேர்தல்<<>> நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


