News May 2, 2024

நீலகிரி வாலிபர் இத்தாலியில் மர்ம சாவு

image

பந்தலூர் ஆனைகட்டியை சேர்ந்தவர்கள் வில்சன்-தங்கமா தம்பதி. இவர்களின் மகன் சஜீஷ் (34). இவர் 2018 முதல் இத்தாலியில் பணியாற்றிவந்தார். இந்த நிலையில், அவரை தொடர்புகொள்ள முடியாததால் இத்தாலியில் உள்ள சஜீஷின் உறவினர் உதவியுடன் விசாரித்தபோது அவர் உயிரிழந்ததும், அவரது உடல் இத்தாலி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. சஜீஷ் உடலை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News March 13, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (12.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News March 13, 2026

உதகையில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்

image

உதகை ஏடிசி திடலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், செயலாளர் பாமா ரமேஷ் முன்னிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதை புழக்கத்தைத் தடுக்கத் தவறிய மாநில அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

News March 12, 2026

நீலகிரி: உங்களைத் தேடி வரும் பெட்ரோல்!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!