News December 30, 2025
ராணிப்பேட்டை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
Similar News
News January 19, 2026
ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் நியமனம்!

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவராக அரக்கோணத்தை சேர்ந்த நரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நேற்று (ஜன.18) வெளியிட்டது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் நரேஷ் குமாருக்கு கட்சி நிர்வாகிகள் இன்று (ஜன.19) நேரிலும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
News January 19, 2026
ராணிப்பேட்டை: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 19, 2026
ராணிப்பேட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை (ஜன.20) ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இக்கூட்டம் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ராணிப்பேட்டை செயற் பொறியாளர் எஸ்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


