News May 2, 2024
கிருஷ்ணகிரி: ஒற்றையானை தாக்கி விவசாயி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஜவளகிரி வனப்பகுதி அடர்வனப்பகுதியாக உள்ள நிலையில் யானை கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை கிராம பகுதிகளை ஒட்டிய விளைநிலங்களிலேயே சுற்றி வருகிறது. இந்நிலையில் மேடுமுத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்த அப்பைய்யா (55) என்பவர் இன்று காலை தனது விளைநிலத்திற்கு சென்றபோது அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்தார்.
Similar News
News November 9, 2025
கிருஷ்ணகிரி: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

கிருஷ்ணகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).
News November 9, 2025
கிருஷ்ணகிரி மாணவர்களே தயார் ஆகுங்கள்!

காந்தி,நேரு ஆகியோரின் பிறந்தநாளையொட்டி மாணவா்களுக்கு வருகிற நவ.12,13 ஆகிய தேதிகளில் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், காலை 9.30மணிமுதல் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் அனுமதிபெற்று, பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம் என மக்கள் தொடர்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
கிருஷ்ணகிரி: மாணவர்களே இதை மிஸ் பண்ணாதீங்க!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக துளிர் திறனறிதல் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற நவ.15 ஆகும். அனைத்து மாணவ மாணவிகளும் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.


