News December 30, 2025
அனைவருக்கும் ₹15,000.. அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்கள் அனைவருக்கும் ₹15,000 ஊக்கத்தொகை வழங்குகிறது பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டம். இத்திட்டத்தில் பயன்பெற EPFO-வில் பதிவு செய்திருக்க வேண்டும், மாத சம்பளம் ₹1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் https://pmvbry.epfindia.gov.in -ல் அப்ளை பண்ணலாம். 2027 ஜூலை வரை இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும். அனைவருக்கும் இத SHARE பண்ணுங்க.
Similar News
News December 31, 2025
2025 REWIND: ஒரே ஆண்டில் ₹43,200 அதிகரித்த தங்கம்!

ஜனவரி 1, 2025-ல் ஒரு சவரன் தங்கம் ₹57,200-க்கு விற்பனையான நிலையில், வருடத்தின் கடைசி நாளான இன்று ₹1,00,400-க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஒரு சவரன் ₹43,200 அதிகரித்துள்ளது. அதே போல, ஜனவரி 1, 2025-ல் ஒரு வெள்ளி கிலோ ₹98,000-க்கு விற்பனையான நிலையில், இன்று ₹2,58,000-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் கிலோ ₹1,60,000 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 31, 2025
தலையீடு இல்லை: சீனாவுக்கு இந்தியா பதிலடி

ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா-பாக்., இடையே மத்தியஸ்தம் செய்ததாக <<18719653>>சீனா தெரிவித்தது<<>>. இந்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தையில் 3-ம் தரப்பு இடம்பெறவில்லை என்று இந்தியா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது. சண்டை நிறுத்தம், இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் ஆலோசித்த எடுத்த முடிவு என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
News December 31, 2025
நிறைவான சந்தோஷத்தை புத்தாண்டு வழங்கட்டும்: EPS

அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் தனது இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவிப்பதாக EPS தெரிவித்துள்ளார். இப்புத்தாண்டில் TN மக்களுக்கு நிறைவான சந்தோஷம், நிறைந்த செல்வம், நீடித்த ஆயுள் வழங்கும் ஆண்டாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.


