News December 30, 2025
தேனி: தாய் கண்டித்ததால் மாணவி விபரீத முடிவு

கம்பம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் சிவயாழினி (15). பத்தாம் வகுப்பு மாணவியான இவருக்கு தற்பொழுது அரையாண்டு விடுமுறை என்பதால் அவரது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். மாணவியின் தாயார் அவரை கண்டித்து அவரது வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் நேற்று (டிச.29) வீட்டில் யாரும் இல்லாத பொழுது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலை குறித்து கம்பம் வடக்கு போலீசார் விசாரணை.
Similar News
News January 13, 2026
தேனி: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க
News January 13, 2026
தேனி: இனி Phone மூலம்.. ரேஷன் கார்டு APPLY..

தேனி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்கார்டு கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு க்ளிக் செய்து செயலியை பதிவிறக்கம் செய்து ஆதார் எண் மட்டும் பதிவு பண்ணா போதும்.. உங்க ரேஷன் கார்டு காண்பிக்கும். அதை பதிவிறக்கம் செய்யுங்க. இதுல நீங்க என்னென்ன பொருள் வாங்கி இருக்கீங்கன்னு பாத்துக்கலாம். கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் பண்ணிக்கலாம். SHARE பண்ணுங்க..!
News January 13, 2026
தேனி: 5 பவுன் கொள்ளை; இரவில் மர்மநபர்கள் கைவரிசை..

இராயப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவரது வீட்டின் அருகிலேயே இவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் அசந்து தூங்கிய நிலையில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை திருடி சென்றனர். திருட்டு சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் நேற்று (ஜன.11) வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


