News December 30, 2025
ஏத்தாப்பூர் அருகே விபத்து!

செக்கடிப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன், 32.இவரது மனைவி பவித்ரா, 30. இருவரும் நேற்று டூ வீலரில் ஏத்தாப்பூர் நோக்கி சென்றனர். படையாட்சியூர் அருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில், அன்பழகன் உயிரிழந்தார். பவித்ரா சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News January 14, 2026
80 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சேலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 80 காவல் ஆய்வாளர்களை (Inspectors) இடமாற்றம் செய்து சேலம் சரக டி.ஐ.ஜி (DIG) சந்தோஷ் ஹடிமணி இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News January 14, 2026
தாரமங்கலம்: வயிற்று வலியால் பெண் விபரீத முடிவு!

தாரமங்கலம் குருக்குப்பட்டியைச் சேர்ந்த சரஸ்வதி (55), அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஒரு ஆண்டாகக் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று மதியம் மனவேதனையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது கணவர் மாரியப்பன் அளித்த புகாரின் பேரில், தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 14, 2026
சேலம்: ரயில்வேயில் வேலை – APPLY NOW

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளமாக Rs.44,900 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. <


