News December 30, 2025
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2 ஏ மற்றும் குரூப் 4 தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் உடுமலை எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வருகிற 7-ந்தேதி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. வகுப்பில் கலந்து கொள்ள திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு செய்து பயன்பெறலாம்.
Similar News
News January 15, 2026
திருப்பூர் மக்களே: உடனே SAVE பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 044-25342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் செய்யுங்க.
News January 15, 2026
திருப்பூரில் கேஸ் புக் பண்ண புது வழி!

திருப்பூர் மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News January 15, 2026
அவிநாசி அருகே 4 வயது சிறுமி உயிரிழப்பு

ஆரியக்கவுண்டன்பாளையத்தில், விசைத்தறி வேலைக்குச் செய்யும் கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தன் – பானுமதி தம்பதி. இவர்களது 4 வயது மகள் புகழினி தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கினர். உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்; இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


