News December 30, 2025

அரியலூர்: 10th போதும்-போஸ்ட் ஆபிஸில் வேலை!

image

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்.

Similar News

News February 18, 2026

அரியலூர்: கல்விக்கடன் பெற அறிய வாய்ப்பு!

image

அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது. அதே போல் 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ-மாணவிகளுக்கான கல்விக் கடன் முகாம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப்.20-ம் தேதியன்று நடைபெற உள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News February 18, 2026

அரியலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு!

image

அரியலூர் மாவட்டம் இலந்தைகூடம் துணை மின் நிலையத்தில் இன்று (பிப்.18) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து மின் விநியோகம் பெறும் அரண்மனைக்குறிச்சி, அண்ணிமங்கலம், பாளையபாடி, திருமழைப்பாடி , வெங்கனூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருமானூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News February 18, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.17) இரவு 10 முதல் இன்று (பிப்.18) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!