News December 30, 2025

கடலூர்: வேன் மோதி முதியவர் துடிதுடித்து பலி

image

பரங்கிப்பேட்டை அருகே அரியகோஷ்டி மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (70). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வேன் ஒன்று குமரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 17, 2026

கடலூர்: விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

கடலூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து பிப். 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News January 17, 2026

கடலூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்!

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <>tnesevai.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

கடலூர்: 3 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர்கள்

image

நடுவீரப்பட்டு போலீஸ் எஸ்.ஐ. ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று நரியங்குப்பம் ஓடை அருகில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு 3 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பத்தை சேர்ந்த சபாபதி மகன் நவீன் (25), கடலூர் ராணிப்பேட்டையை சேர்ந்த செல்வம் மகன் அருண்குமார் (18), நரியங் குப்பத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் சசிகுமார் (22) ஆகியோரை கைது செய்தனர்.

error: Content is protected !!