News December 30, 2025

ராமநாதபுரம்: சம்பவ இடத்திலே தம்பதியினர் பலி

image

கமுதி மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கிழவன் 45. இவர் கமுதி ஒன்றிய அலுவலகத்தில் மருந்து தெளிக்கும் தற்காலிக பணியாளராக பணிபுரிகிறார்.இவர் மனைவி ஜோதிமுத்துவுடன் 38, கானாவிலக்கு பகுதியில் இருந்து டூவீலரில் கமுதி நோக்கி சென்றார். அப்போது மேலராமநதி அருகே பழுதாகி நின்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக டூவீலர் மோதியதில் இருவரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 13, 2026

ராமநாதபுரம் மீனவர் உடல் மீட்பு; ஒருவரை தேடும் பணி

image

பாம்பன் குந்துகால் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற 5 மீனவர்களில், தனுஷ்கோடி அருகே ஏற்பட்ட சூறாவளி காற்றால் சரத்குமார், டைசன் ஆகிய இருவரும் கடலில் விழுந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு சரத்குமாரின் உடல் மீட்கப்பட்டது. மாயமான டைசனை இந்திய கடலோரக் காவல் படையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 13, 2026

ராமநாதபுரம் இதில் No.1 – புள்ளி விவரங்கள்!

image

தமிழகத்தில் லஞ்ச வழக்குகள் பதிவில் ராமநாதபுரம் மாவட்டம் இரு ஆண்டுகளாக முதலிடம். மூன்று ஆண்டுகளில், 1,055 அரசு ஊழியர்கள் மீது லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ராமநாதபுரத்தில், 61 வழக்குகளும், 2025ல் மட்டும், 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 16 வழக்குகளில் பொதுமக்களிடம் நேரடியாக லஞ்சம் பெறபட்ட 20 அரசு அலுவலர்கள், 2 புரோக்கர்கள் என 22 பேர் கைது செய்யபட்டனர்.

News January 13, 2026

ராமநாதபுரம் இதில் No.1 – புள்ளி விவரங்கள்!

image

தமிழகத்தில் லஞ்ச வழக்குகள் பதிவில் ராமநாதபுரம் மாவட்டம் இரு ஆண்டுகளாக முதலிடம். மூன்று ஆண்டுகளில், 1,055 அரசு ஊழியர்கள் மீது லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ராமநாதபுரத்தில், 61 வழக்குகளும், 2025ல் மட்டும், 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 16 வழக்குகளில் பொதுமக்களிடம் நேரடியாக லஞ்சம் பெறபட்ட 20 அரசு அலுவலர்கள், 2 புரோக்கர்கள் என 22 பேர் கைது செய்யபட்டனர்.

error: Content is protected !!