News December 30, 2025

தூத்துக்குடி: மூச்சுத் திணறலால் 2 பெண்கள் பலி

image

தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் செல்வ சுந்தரி (65) நேற்று திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதேபோல, பூபால்ராயபுரத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (48) மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நேற்று இறந்துள்ளார். இதுபற்றி தென்பாகம் மற்றும் வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 15, 2026

தூத்துக்குடி: மக்களே.. இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>eservices.tn.gov.in<<>> என்ற தளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். SHARE பண்ணுங்க.

News January 15, 2026

தூத்துக்குடி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000…!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT

News January 15, 2026

தூத்துக்குடி: அரிவாளுடன் பிரபல ரவுடி கைது

image

முறப்பநாடு போலீசார் நேற்று மணக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி பார்வதி நாதன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவரிடம் மிகப்பெரிய அரிவாள் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!