News December 30, 2025
கடலூரில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது – எஸ்பி தகவல்

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 307 குட்கா போதைப்பொருட்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 403 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 6,224 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று(டிச.29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 12, 2026
கடலூரில் 2000 ஆண்டு பழமையான கோயில்

கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் கோயில் தோராயமாக 2000 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர் மற்றும் இடைக்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு சிவனை ஒரு முறை வழிபடுவது காசியில் 16 முறையும், தி.மலையில் 8 முறையும், சிதம்பரத்தில் 3 முறையும் வழிபடுவதற்கு சமம் என அப்பகுதி மக்களின் நம்பிக்கை. மேலும் புலியூர் என்ற புலிக்கால் துறவி இப்பகுதியில் பாவமன்னிப்பு பெற்றதால் பாடலீஸ்வரர் கோயில் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
News January 12, 2026
கடலூர் மாவட்டம் முழுவதும் 17.5 மி.மீ மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜன.12) காலை 8.30 மணி நிலவரப்படி பரங்கிப்பேட்டை 3.2 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரி 3 மில்லி மீட்டர், மே.மாத்தூர் 3 மில்லி மீட்டர், அண்ணாமலை நகர் 2.7 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் பண்ருட்டி தலா 1.3 மில்லி என மாவட்டம் முழுவதும் 17.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News January 12, 2026
கடலூர்: EMI-ல் கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

கடலூர் மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு <


