News December 30, 2025
புதுவை: குளத்தில் மூழ்கிய கூலித்தொழிலாளி பலி

காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(29). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் பெரியகாலாப்பட்டு முருகன் கோவில் குளத்தில் மீன் பிடித்தபோது திடீரென குளத்தில் தவறி விழுந்து மூழ்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காலாப்பட்டு தீயணைப்பு வீரர்கள், ராஜாவை தேடினர். இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் ராஜாவை நேற்று மதியம் குளத்தில் இருந்து சடலமாக மீட்டனர்.
Similar News
News January 10, 2026
புதுவை: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

புதுவை மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News January 10, 2026
புதுச்சேரி: இந்த எண்களை மிஸ் பண்ணாதிங்க

புதுச்சேரி பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:
1.மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி-1070
2.பிராந்திய ஆணையர் மற்றும் துணை ஆட்சியர் வடக்கு-1077
3.அவசர ஊர்தி (Ambulance)-102, 108
4.தீயணைப்பு-101
5.காவல் கட்டுப்பாட்டு அறை-100
6.குழந்தைகள் பாதுகாப்பு-1098
7.பெண்கள் உதவி-1091
8.சாலை விபத்துகள்-1073
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.
News January 10, 2026
புதுவை: ரவுடிகள் உட்பட 8 பேர் கைது

திருக்கனூர் அடுத்த வாதானூர் மின்துறை அலுவலகம் அருகே பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, தலைமை காவலர் துரைக்கண்ணு மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு, கஞ்சா விற்பனை செய்த ரவுடிகள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து, 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


