News December 30, 2025
ராமநாதபுரம்: துணை ஜனாதிபதி இன்று வருகை

ராமேஸ்வரத்தில் இன்று நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார். பாதுகாப்பு காரணம் கருதி ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் மதியம் 3:00மணிக்கு வந்திறங்கி, பின் காரில் ராமேஸ்வரம் வர உள்ளார்.1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
Similar News
News January 14, 2026
இராம்நாடு: அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

இராம்நாடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News January 14, 2026
ராம்நாடு : போஸ்ட் ஆபீஸில் வேலை!

இராமநாதபுரம் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் நாளை ஜன.15-க்கு பிறகு இங்<
News January 14, 2026
ராம்நாடு: கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

ராமேஸ்வரம் அடுத்த கெந்தமாதன பர்வதம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து நீண்ட நேரமாக உயிருக்கு போராடி பரிதாபமாக உயர்ந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து காவல்துறையினர் உதவியுடன் உடலை பத்திரமாக மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.


