News December 30, 2025

விழுப்புரம்: 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி!

image

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுார் பகுதியைச் சேர்ந்த ரோசா (35), தனது 3 குழந்தைகளுடன் கணவரின்றி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது கணவர் சொத்துக்களை மாமனார், மாமியார் அபகரித்துவிட்டதாக நேற்று தனது குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.அவரை தடுத்து நிறுத்திய போலீசார், அவரை சமாதானம் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 13, 2026

விழுப்புரம்: பொங்கல் பணம் ரூ.3,000 வரலையா?

image

உங்களுக்கு இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வரலையா? பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என தெரிவித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 என்ற எண்ணில் நீங்கள் புகாரளிக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது பற்றி நீங்கள் மெசேஜ் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஷேர்!

News January 13, 2026

விழுப்புரம்: சாலை விபத்தில் முதியவர் பலி!

image

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவர் நேற்று புதுச்சேரியில் இருந்து திருவக்கரைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். பெரும்பாக்கம் பகுதியில் சாலை வளைவில் திரும்பும்போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News January 13, 2026

விழுப்புரத்தில் இளம்பெண் தற்கொலை!

image

திண்டிவனம் தீவனூர் கிராமத்தை சேர்ந்தவர் புனிதா. இவருக்கும் புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் பகுதி சேர்ந்த பிரவீன் குமார் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 4 மாத கைக்குழந்தை உள்ளது. கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில், புனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசார் விசாரணை செய்கின்றனர்.

error: Content is protected !!