News December 30, 2025
தருமபுரி குறிஞ்சி கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு ஆலோசனை!

தருமபுரி ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் இன்று(டிச.29) மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் P.K.கைலாஷ் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் துறை அலுவலர்கள் பங்கு பெற்றனர். பின், உணவு தரத்தை மேம்படுத்த கலந்துரையாடினர்.
Similar News
News January 10, 2026
தருமபுரி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News January 10, 2026
தருமபுரி: Gpay, Phone pay பயனாளர்கள் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News January 10, 2026
தருமபுரி பொதுமக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தருமபுரியில் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையினை நமது முன்னோர்கள் கொண்டாடி வந்துள்ளனர். எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எதிர்வரும் 14. ஜனவரி 2026 அன்று சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையைக் கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஸ், தெரிவித்துள்ளார்கள்.


