News December 30, 2025

கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி

image

கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா தலைமையில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பாரில் மது விற்பனை சோதனை செய்துள்ளனர். இதில் மது விற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆனந்த பிரகாஷ் (30) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சத்யராஜ் (36)ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 55 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்

Similar News

News January 13, 2026

கரூர்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.

1)பான்கார்டு: NSDL

2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in

3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/

4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink

இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

News January 13, 2026

கரூர்: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

image

கரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால் <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 13, 2026

கரூர்: பெண்ணை அதிரடியாகக் கைது செய்த போலீசார்!

image

கரூர் மாவட்டம் கூடலூர் பனையம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி மகேஸ்வரி சக்தி (42). இவர் அப்பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற சின்னதாராபுரம் போலீசார் மது விற்ற மகேஸ்வரி சக்தி மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்

error: Content is protected !!