News December 30, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டம், முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கு தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி (டிச.29) இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யவும்.
Similar News
News January 15, 2026
அரியலூர்: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை திருச்சி மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9842074680) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!
News January 15, 2026
அரியலூர்: 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கும், அதனுடன் இணைந்த பார்களுக்கும், எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்களுக்கும் நாளை ஜன.16ஆம் தேதி மற்றும் வருகிற ஜன.26ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் இயங்காது என கலெக்டர் ரத்தினசாமி அறிவித்துள்ளார். மேலும் அன்றைய நாட்களில் இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.
News January 15, 2026
அரியலூர்: மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலார்கள் நலவாரியத்தின் மூலம் உதவித்தொகை பெற்று அல்லது பெற விண்ணப்பித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அரியலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தரிவித்துள்ளார்.


