News December 29, 2025
மகளிர் உரிமைத் தொகை ₹28,000.. CM ஸ்டாலின் அப்டேட்

திமுக ஆட்சியில் 1.30 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சியின் மகளிர் மாநாட்டில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகையால் பெண்களுக்கு சுய மரியாதை, தன்னம்பிக்கை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாகவும், இதுவரை குடும்ப தலைவிகளுக்கு தலா ₹28,000 வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
Similar News
News January 13, 2026
பிரபல பாடகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

பிரபல பாடகர் சமர் ஹசாரிகா (75) உடல்நலக் குறைவால் காலமானார். அசாம் திரையுலகில் பின்னணி பாடகராக கொடி கட்டி பறந்த இவர், பாரத ரத்னா பெற்ற பூபன் ஹசாரிகாவின் சகோதரர் ஆவார். தமிழ் திரையுலகில் கோலோச்சிய SPB போல, அசாமில் புகழ்பெற்று இருந்துள்ளார். அம்மாநில கலாசாரத்தை போற்றும் வகையில் பல ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News January 13, 2026
செல்வப்பெருந்தகை மதிப்பு இழந்து வருகிறார்: தமிழிசை

விஜய் விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக செல்வப்பெருந்தகை சொல்வதில் அர்த்தமே இல்லை என தமிழிசை கூறியுள்ளார். மேலும், கூட்டத்தில் சிக்கி ஒரு உயிரிழப்பு ஏற்பட்டதற்காக தெலங்கானாவில் ஒரு நடிகரை காங்கிரஸ் CM கைது செய்தார். ஆனால் விஜய்க்காக பேசி இங்குள்ள காங்., தலைவர் செல்வப்பெருந்தகை குளிர்காய்கிறார் என்றும், கட்சிக்குள் தனது முக்கியத்துவத்தை இழந்து வருவதால் அவர் இப்படி பேசுவதாகவும் விமர்சித்துள்ளார்.
News January 13, 2026
சிலிண்டருக்கு அடியில் ஓட்டை இருப்பது ஏன் தெரியுமா?

வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டருக்கு அடியில் துளைகள் இருப்பதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. தரைக்கும் கேஸ் சிலிண்டருக்கு இடையே காற்றழுத்தம் ஏற்படாமல் இருக்க இந்த துளைகள் உதவுகின்றன. அத்துடன் சிலிண்டருக்கு அடியில் தண்ணீர் தேங்கினால் சிலிண்டர் துருபிடிக்கலாம். இதனால் சிலிண்டர் பழுதாகி எரிவாயு கசிவு ஏற்பட்டு விபத்து நிகழும் அபாயம் இருக்கிறது. இவற்றையெல்லாம் தடுக்கவே இந்த துளைகள் இருக்கிறன. SHARE.


