News May 2, 2024
விடுமுறை அளிக்காத 114 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளா் தினமான மே 1 அன்று அனைத்து நிறுவனங்களும், ஊழியா்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்ற விதியை மீறி மதுரையில் 114 நிறுவனங்கள் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் 1958, மோட்டாா் போக்குவரத்துத் தொழிலாளா் சட்டம் 1961 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 6, 2026
BREAKING மதுரைக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(மார்ச்.7) நண்பகல் 12.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தனியார் விடுதியில் தங்குகிறார். அதன்பின் மாலை 5.20 மணிக்கு திருமங்கலம் ராயபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுக கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாலை 6 மணிக்கு சென்னை செல்கிறார்.
News March 6, 2026
மதுரை: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

மதுரை மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <
News March 6, 2026
மதுரை: அகில இந்திய அளவில் சாதனை படைத்த மாணவி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மார்ச்.6) வெளியாகியுள்ளன. இதில் வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அனுஜ் அக்னிஹோத்ரி முதலிடத்தையும், ஆகாஷ் துல் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். மொத்தம் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராஜேஸ்வரி நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்வர் என்பது குறிப்பிடத்தக்கது


