News December 29, 2025
ராமநாதபுரம்: 564 கிலோ கஞ்சா கடத்தல்: மேலும் ஒருவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு வாணி வீதி கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி பாண்டியன் 25. இவருக்கு சொந்தமான தோப்பில் உள்ள வீட்டில் இருந்து கேணிக்கரை போலீசார் 564 கிலோ கஞ்சாவை டிச.24 அன்று பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய 10 பேரை சம்பவத்தன்று கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பசுபதி பாண்டியனை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Similar News
News February 8, 2026
ராமநாதபுரம்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 8, 2026
ராமநாதபுரம்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

ராமநாதபுரம் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE
News February 8, 2026
ராமநாதபுரம்: ரூ.15,000 கோடி கடன் வழங்க இலக்கு

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வங்கியாளர்களுக்கான மாவட்ட ஆலோசனை குழு கூட்டத்தில் 2026 – 27 ஆம் ஆண்டின் முன்னுரிமை துறைகளுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை ஆட்சியர் வெளியிட்டார். அதன்படி நுண், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் ரூ.1,351 கோடி, பிற முன்னுரிமை துறைகளுக்கு ரூ.1,771 கோடி, வேளாண்மைக்கு ரூ.12,200 கோடி கடன் வழங்க மதிப்பிடப்பட்டுள்ளது.


