News December 29, 2025
தூத்துக்குடி: பணம் விவகாரத்தில் தாய், மகன் கடத்தல்!

ஸ்ரீவை பகுதியை சேர்ந்த ராஜபாண்டி, தேனியை சேர்ந்த மல்லிகாவிடம் (58) ரூ.5 லட்சம் கடன் கொடுத்துள்ளார். மல்லிகா கடந்த 2 மாதமாக வட்டி கட்டாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் ராஜபாண்டி 5 பேருடன் மல்லிகா வீட்டில் அத்துமீறி நுழைந்து, மல்லிகா, அவரது மகன் துர்கேஷை தாக்கி 15 பவுன் நகை, ரூ.50,000 எடுத்துள்ளனர். பின் காரில் கடத்தி திருமங்கலம் பகுதியில் இறக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
Similar News
News January 13, 2026
தூத்துக்குடி: இனி செல்போனில் ரேஷன் கார்டு

தூத்துக்குடி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்கார்டு கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. <
News January 13, 2026
தூத்துக்குடி: பைக் மீது பஸ் மோதி பரிதாப பலி

சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு உடைப்பிறப்பை சேர்ந்தவர் ராஜபாண்டி (71). இவர் நேற்று காலை அவரது ஊரிலிருந்து திசையன்விளைக்கு பைக்கில் சென்றார். இடைச்சிவிளை பகுதியில் வரும்போது எதிரே வந்த தனியார் ஆம்னி பேருந்து இவரது பைக் மீது பயங்கரமாக மோதியது. பலத்த காயமடைந்த ராஜபாண்டி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து தட்டார் மடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News January 12, 2026
தூத்துக்குடி: உங்களிடம் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.


