News December 29, 2025
கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு தொடங்க அனுமதி!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடைபெறும். அதன்படி வரும் ஜனவரியில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறந்த பின்னர் அகழாய்வு பணிகள் தொடங்கும். இதுவரை சுமார் 20,000 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், 11-ம் கட்ட ஆய்வு மூலம் வைகை நாகரிகத்தின் எஞ்சிய ரகசியங்கள் வெளிவரும்.
Similar News
News January 25, 2026
பிரபல நடிகை காலமானார்.. அதிர வைக்கும் காரணம்

‘Jesus Heaven’, ‘Camels Do Not Cry Separately’ போன்ற படங்கள் மூலம் உலகம் முழுவதும் அறியப்படும் பிரபல கொரிய நடிகை நாம் ஜியோங் ஹீ (84) காலமானார். இந்நிலையில், அவரது இறப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது. ஓராண்டுக்கு முன்பு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட பிறகு அவரது உடல் மோசமடைந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறது.
News January 25, 2026
இன்று கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா விஜய்?

விஜய் பங்கேற்கும் தவெக செயல்வீரர்கள் கூட்டம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஜன நாயகன் பிரச்னை, கரூர் துயரம் தொடர்பான சிபிஐ விசாரணை என எது குறித்தும் அவர் கடந்த ஒரு மாதமாக பேசாமல் இருந்தது விமர்சனத்திற்குள்ளானது. இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள தவெக கூட்டத்தில், விஜய் என்ன பேசுவார் என எதிர்பார்க்கும் தொண்டர்கள், கூட்டணியா (அ) தனித்து போட்டியா என்பதையும் அறிவிப்பார் என கூறுகின்றனர்.
News January 25, 2026
பாஜகவுக்கு 30 சீட்.. EPS போடும் கணக்கு

வலுவான கூட்டணியை அமைக்க பாஜக உதவியதால், அக்கட்சிக்கு கடந்த முறையைவிட கூடுதல் சீட்களை தர EPS முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பாஜக 40 சீட் கேட்ட நிலையில், 20 சீட் மட்டுமே என EPS கறார் காட்டினாராம். தற்போது பாஜகவின் நடவடிக்கையால் அமமுக மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து கூட்டணி வலுப்பெற்றுள்ளதால் உற்சாகத்தில் உள்ள EPS, 30 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.


