News December 29, 2025
மதுரை: சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி பலி

பேரையூர் புளியம்பட்டியை சேர்ந்தவர் ராஜம்மாள்(75). தனித்து வசித்து வந்த இவர் வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றிய போது எதிர்பாராமல் சேலையில் தீப்பற்றியது. இதில் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 7, 2026
மதுரை அருகே 9ம் வகுப்பு மாணவி பலி

நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ராமகண்ணன் மகள் விஜய்ஸ்ரீ(13), சிறுமலர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இச் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரால் கண்களை மூட முடியவில்லை. உடல் முழுவதும் சிராய்ப்பு மற்றும் நீல நிறமாக இருந்தது. மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 7, 2026
சோழவந்தான் அருகே லாரி மோதி முதியவர் பலி

சோழவந்தான் நகரி நெடுஞ்சாலையில் நேற்று மாலை சுமார் 55 வயது முதியவர் நடந்து சென்ற பொழுது அந்த வழியாகச் சென்ற வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விஏஓ ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மோதிய வாகனம் கன்டெய்னர் லாரி என தெரிய வந்தது. பிணத்தை கைப்பற்றி இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 7, 2026
மதுரை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW..!

மதுரை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <


