News December 29, 2025
தருமபுரி: பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து துணிகரம்!

நல்லாம்பட்டியில், கூலித் தொழிலாளி முனிராஜ் என்பவரது வீட்டின் கதவை உடைத்து 19.5 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. முனிராஜின் மனைவி வெண்ணிலா மதியம் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, பீரோ உடைக்கப்பட்டு நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News January 13, 2026
தருமபுரியில் பொங்கல் விழா; எம். பி அழைப்பு

தருமபுரி மாவட்டக் கழக அலுவலகத்தில் பொங்கல் விழா நாளை (ஜன.14) காலை 10.00 மணி அளவில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பிக்குமாறு எம். பி மணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
தருமபுரி: சாமந்திப்பூ விற்பனை படுஜோர்!

தருமபுரி நகர பேருந்து நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் பொங்கலை முன்னிட்டு சாமந்திப்பூ வியாபாரம் அதிகரித்துள்ளது. இதில் 1 கிலோ சாமந்தி பூ ரூ. 50 என விற்பனையானது. மேலும் ஒரு குவிண்டால் (100 கிலோ) பூ ரூ.5000 முதல் ரூ.8500, குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ₹20,000 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் விளைச்சல் அதிகரித்தால் விலை குறையலாம் என வியாபாரிகள் தெரிவித்த்தனர்.
News January 13, 2026
தருமபுரி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

தருமபுரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


