News December 29, 2025
பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான இந்த கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் மிருணாளனி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 17, 2026
பெரம்பலூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <
News January 17, 2026
பெரம்பலூர்: சட்டவிரோத மது விற்பனை செய்தவர் கைது

ஆலத்தூர் வட்டம், பாடலூர் டாஸ்மாக் கடையின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல் துறையினருக்கு தெரியவந்தது. இது குறித்து பாடலூர் காவல் துறையினர் சோதனை நடத்திய போது ஆலம்பாடியைச் சேர்ந்த அனஞ்சி (48) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 28 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 17, 2026
பெரம்பலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.


