News December 29, 2025

காஞ்சிபுரம் போலீஸ் அதிரடி நடவடிக்கை!

image

வாலாஜாபாத் அடுத்த ஆசிரியர் நகரில், வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது சம்பந்தமாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கோபி என்பவரை வாலாஜாபாத் போலீசார் நேற்று(டிச.28) கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 20.662 கிலோ குட்கா பொருள் 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

Similar News

News January 12, 2026

ஸ்ரீபெரும்புதூரில் துடிதுடித்து பலி!

image

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார்(32). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பால்நல்லூர் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் தனது பைக்கில் வேலைக்கு சென்ற போது நெமிலி அருகே, அவர் பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 12, 2026

காஞ்சிபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை!

image

குன்றத்தூர், சடையாண்டீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா(35). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், ஆந்திராவைச் சேர்ந்த ரேவதி(33) என்பவரைக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு கர்ப்பமான ரேவதிக்கு 4ஆவது மாதத்திலேயே கரு கலைந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று(ஜன.11) அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

News January 12, 2026

காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்றமையோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!