News December 29, 2025

தீபம் ஏற்றக்கூடிய நாள் வரும்: ஜி.ஆர்.சுவாமிநாதன்

image

தனக்கும் தீபத்திற்கும் என்ன பொருத்தம் என்றே தெரியவில்லை என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார். நூல் வெளியீட்டு விழா ஒன்றில், குத்துவிளக்கு ஏற்ற தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தார். ஆனால், தீபம் ஏற்றக்கூடிய நாள் வரும் என நம்புவதாக பேசினார். தி.குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என அவர் உத்தரவிட்டதற்கு எதிராக வழக்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 12, 2026

உங்கள் சகோதரனாக நான் இருக்கிறேன்: CM ஸ்டாலின்

image

கடலும் நாடுகளும் நம்மை பிரித்தாலும் மொழியும் இனமும் நம்மை இணைக்கின்றன என அயலக தமிழர்கள் தின விழாவில் CM ஸ்டாலின் பேசியுள்ளார். கீழடி, சிவகளை உள்ளிட்ட அகழாய்வுகள் மூலம் தமிழர்களின் தொன்மையை உலகமே அறிந்துள்ளதாக கூறிய அவர், திமுக அரசு இந்த வரலாற்று கடமையை செய்துகாட்டி இருப்பதாக கூறினார். மேலும், உங்களுக்காக (அயலக தமிழர்களுக்காக) தமிழகத்தில் இந்த சகோதரன் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

News January 12, 2026

FLASH: தொடர் சரிவால் தடுமாறும் இந்திய சந்தைகள்!

image

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 715 புள்ளிகள் சரிந்து 82,861 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 210 புள்ளிகள் சரிந்து 25,473 புள்ளிகளாகவும் வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்தமுள்ள 4,252 நிறுவனங்களில் 3,189 நிறுவன பங்குகள் இச்சரிவை சந்தித்ததால், ₹6 லட்சம் கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புத்தாண்டு அன்று 85,451-ஆக இருந்த சென்செக்ஸ் தற்போது 2,600 புள்ளிகள் சரிந்துள்ளது.

News January 12, 2026

இவர் தூய்மை பணியாளர் மட்டுமில்ல.. தூய்மையானவர்!

image

மனித மனம் எப்போதும் தடுமாறக்கூடியதே. ஆனால், சென்னையை சேர்ந்த பத்மா, தன் வேலையை போலவே மனதளவிலும் தூய்மையானவராகவே உள்ளார். சென்னை தி.நகரில் அவர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த போது, 45 சவரன் தங்க நகைகள் கிடைத்துள்ளன. உடனே, அதனை அவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். சுமார் ₹48 லட்சம் மதிப்பிலான நகைகளை தவறவிட்ட ரமேஷ் என்பவரிடம் நகை ஒப்படைக்கப்பட, பத்மாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. Salute மேடம்!

error: Content is protected !!