News December 29, 2025
கோவை: மதுவுக்கு அடிமையானவர் திடீரென உயிரிழந்தார்

கோயம்புத்தூர் மாவட்ட வடவள்ளி பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (45). இவர் மதுவுக்கு அடிமையானதால் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன் சென்று விட்டார். இந்நிலையில் இவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
Similar News
News January 26, 2026
கோவை: 12th போதும்.. ரூ.44,000 சம்பளம்

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,000
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 26, 2026
கோவை: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

கோவை மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)
News January 26, 2026
BREAKING: கோயம்புத்தூருக்கு 3-ம் பரிசு

நாட்டின் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று (ஜன.26) தமிழ்நாட்டின் சிறந்த முதல் மூன்று காவல் நிலையங்களுக்கு CM ஸ்டாலின் பரிசு வழங்கினார். அதில் கோவை காவல்நிலையத்திற்கு 3-ம் பரிசு வழங்கப்பட்டது. மேலும், மதுரை முதலிடம் மற்றும் திருப்பூர் 2ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


