News December 29, 2025

கோவை: மதுவுக்கு அடிமையானவர் திடீரென உயிரிழந்தார்

image

கோயம்புத்தூர் மாவட்ட வடவள்ளி பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (45). இவர் மதுவுக்கு அடிமையானதால் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன் சென்று விட்டார். இந்நிலையில் இவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

Similar News

News January 1, 2026

கோவையை பதற வைத்த இ-மெயில்!

image

கோவையில் சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகம் மாவட்ட எஸ்பி அலுவலகம் எஸ்பிஐ வங்கி பிரதான அலுவலகம் என பாதுகாப்பு மிகுந்த பகுதியில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நேற்று 24வது முறையாக கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மெயில் வந்துள்ளது. அந்த மெயிலில் சிங்கள மொழியில் புத்தாண்டு அதிசயம் என தலைப்பிட்டு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

News January 1, 2026

“இந்தியா வல்லரசாகும் வரை கடன் கிடையாது” – வைரல் வியாபாரி

image

மேட்டுப்பாளையம் நீலகிரி மலையின் அடிவார பகுதியில் இருப்பதால் மலை காய்கறிகள், பழங்கள், உருளைக்கிழங்குகள் மொத்த வியாபார “ஹப்”பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று லோடு ஆட்டோவில் வைத்து பழ வியாபாரம் செய்து வரும் வியாபாரி ஒருவர் தனது ஆட்டோவில் “இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கிடையாது” என பதாகை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த பதாகை தற்போது வைரலாகி வருகிறது.

News January 1, 2026

“இந்தியா வல்லரசாகும் வரை கடன் கிடையாது” – வைரல் வியாபாரி

image

மேட்டுப்பாளையம் நீலகிரி மலையின் அடிவார பகுதியில் இருப்பதால் மலை காய்கறிகள், பழங்கள், உருளைக்கிழங்குகள் மொத்த வியாபார “ஹப்”பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று லோடு ஆட்டோவில் வைத்து பழ வியாபாரம் செய்து வரும் வியாபாரி ஒருவர் தனது ஆட்டோவில் “இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கிடையாது” என பதாகை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த பதாகை தற்போது வைரலாகி வருகிறது.

error: Content is protected !!