News December 29, 2025
திருச்சி மைய நுாலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட்டணமில்லா மாதிரி தேர்வு டிச.29ம்தேதி (திங்கள் கிழமை) காலை 10 – 1.30 மணி வரை நடைபெற உள்ளது. முழு பாடப்பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குப்பின் மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்பட்டு, அதிக மதிப்பெண் பெறும் முதல் மூவருக்கு முறையே ரூ.500,ரூ.400,ரூ.300 ஊக்கப்பரிசு வழங்கப்படும் என மாவட்ட நுாலக அலவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 1, 2026
திருச்சி: தேள் கடித்து சிறுவன் பலி

கீழப்பட்டியை சேர்ந்தவர் சர்வந்த் (8). 3-ம் வகுப்பு படித்து வந்த சர்வந்த் விளையாடிக் கொண்டிருந்தபோது தேள் ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நேற்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறுவன் மயங்கி விழுந்துள்ளான். இதையடுத்து சிறுவனை மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
News January 1, 2026
திருச்சி: B.E / B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை!

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 119 Trainee Engineer-I பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 119
3. வயது: 21 – 28
4. சம்பளம்: ரூ.30,000 – ரூ.40,000
5. கல்வித்தகுதி: B.E / B.Tech
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News January 1, 2026
திருச்சி ரயில் நாளை ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் டெமு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் ஜன.2, 4, 7 ஆகிய தேதிகளில் திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


