News December 29, 2025

திருச்சி மைய நுாலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு

image

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட்டணமில்லா மாதிரி தேர்வு டிச.29ம்தேதி (திங்கள் கிழமை) காலை 10 – 1.30 மணி வரை நடைபெற உள்ளது. முழு பாடப்பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குப்பின் மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்பட்டு, அதிக மதிப்பெண் பெறும் முதல் மூவருக்கு முறையே ரூ.500,ரூ.400,ரூ.300 ஊக்கப்பரிசு வழங்கப்படும் என மாவட்ட நுாலக அலவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 15, 2026

திருச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

பொதுமக்களின் நலன் கருதி திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘தெரியாத வங்கி கணக்கிலிருந்து தவறுதலாக உங்களுக்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.! இது உங்கள் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு அல்லது ஹேக் செய்வதற்கு பொறியாக இருக்கலாம்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News January 15, 2026

திருச்சி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு.. APPLY NOW!

image

திருச்சி மக்களே, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

News January 15, 2026

திருச்சி: ஜல்லிக்கட்டு போட்டி – ஐஜி எச்சரிக்கை

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும். போட்டியில் பங்கேற்பவர்களும், காளையின் உரிமையாளர்களும் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!