News December 29, 2025
அரியலூர் மாவட்டம் காவலர்கள் ரோந்து பணி விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.28) இரவு 10 மணி முதல், இன்று(டிச.29) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில், ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 4, 2026
அரியலூர்: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

அரியலூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்!
News February 4, 2026
அரியலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 13ந்தேதி நடைபெறவுள்ளது. மாலை 3.30 மணிக்கு அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ள இம்முகாமில், முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 4, 2026
அரியலூர்: பைக் சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீசார் பாப்பாக்குடி மேம்பாலத்தின் கீழே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாகசகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்ட போலீசார், நால்வரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.


