News May 2, 2024
CSK அணிக்கு புதிய சிக்கல்

CSK வீரர் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். PBKS-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், முதல் ஓவரில் 2 பந்துகள் வீசிய அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து பாதியிலேயே விலகினார். நேற்றைய போட்டியுடன் முஸ்தஃபிசூர் ரகுமான் அணியில் இருந்து விலகியுள்ள நிலையில், தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளது CSK அணிக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
Similar News
News March 23, 2026
வேலூர்: திருமண தடை நீக்கும் கோவில்!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மயிலாடும் மலையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகப்பெருமான் திருக்கோவிலில் பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக திருமண தடை , புதிய வீடு கட்டுதல், தொழில் முன்னேற மற்றும் கல்வியில் முன்னேற தேங்காயை கோயிலில் கட்டி வைத்தால் கண்டிப்பாக நிறைவேறும். எனவே கோவில்களில் அதிக அளவு தேங்காய் கட்டி முருகனை பக்தர்கள் வழிபடுகின்றனர்.
News March 23, 2026
முகம் Dull-ஆவே இருக்கா? ஒரு பொருள் போதும்

என்ன செய்தாலும் முகம் Dull-ஆகவே இருக்கிறதா? முகத்தைப் பொலிவாக வைக்க பச்சைப் பால் போதும். இதற்கு, முதலில் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். பிறகு, இரண்டு டீஸ்பூன் பச்சைப் பாலில், சிறிது தேன் கலந்து நன்றாகக் கலக்கி, அதை முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து, தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதை, தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவுடன் இருக்கும். SHARE.
News March 23, 2026
சாத்தான்குளம் வழக்கில் நெஞ்சை உலுக்கும் உண்மைகள்!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான 9 போலீசாரும் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அதில் நீதிபதி குறிப்பிட்ட முக்கிய விவரங்கள் இவை: *ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது. *நாம் அடித்து பழகுவதற்கு அப்பா – மகன் கிடைத்துள்ளனர்; அடித்து பயிற்சி எடுப்போம் என போலீசார் பேசியுள்ளனர். *இரவு முழுவதும் 10 நிமிடம் இடைவெளி விட்டு கம்பு, கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.


