News December 28, 2025
காஞ்சிபுரம்: ஹோட்டலில் தரமற்ற உணவா?

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீப காலமாக சில முக்கிய உணவகத்தில் இதுபோன்ற குற்றசாட்டுகள் எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 30, 2025
காஞ்சிபுரம்: சிறுவன் மீது கல்லால் தாக்குதல்!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கன்னியப்பன்(18), திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுருந்து வந்தார். இவருடன் இரண்டு பேர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கன்னியப்பன் மீது ஒரு கொலை வழக்கு உள்ளதும், அதற்கு பழிவனக்குவதற்காக கூட இருந்த 18 வயது சிறுவன் கல்லால் தாக்கியதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 30, 2025
காஞ்சிபுரம்: விபத்தில் துடிதுடித்து பலி!

சாலவாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட புத்தரகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் திவாகர்(32) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 3 மாதத்தில் ஓர் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் பைக்கில் பழைய சீவரம் சர்க்கரை ஆலை அருகே சென்ற போது பின்னால் வந்த பஸ் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 30, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டம் நேற்று (29.12.2025) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்


