News December 28, 2025
தாயின் சடலத்துடன் 20 நாள்கள் வாழ்ந்த இளைஞர்!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில், தாயாருடன் வசித்து வந்தவர் பிரவீன் கால்கோ. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த தாய்க்கு, வீட்டிலேயே சிகிச்சை பார்த்து வர, திடீரென உயிரிழந்துள்ளார். தாயின் பிரிவை தாங்க முடியாமல், அதிர்ச்சியில் கடும் மன அழுத்தத்திற்கு சென்ற அவர், 20 நாள்களாக தாயின் சடலத்துடன் ஒரே அறையில் வசித்துள்ளார். உடல் அழுகி, துர்நாற்றம் வீசிய பிறகே இந்த துயர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Similar News
News January 12, 2026
காலையில் எழுந்ததும் இதை செய்தால்..

காலையில் எழுந்திருக்க ஒரு வழக்கமான நேரத்தை அமைத்துக் கொள்வது முக்கியம். இது அறிவாற்றல் செயல்பாட்டை கணிசமாக மேம்படுத்தும். தூக்கத்தின் தரமும் மேம்படும். நாள் முழுக்க கவனம், நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை ஆரோக்கியத்திற்கு சத்தான காலை உணவு முக்கியம். முட்டை, பெர்ரி, நட்ஸ் என ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளவும். இவை அறிவாற்றலை அதிகரித்து, நாள் முழுவதும் மனநிலையை சீராக வைத்திருக்க உதவும்.
News January 12, 2026
காலையில் எழுந்ததும் இதை செய்தால்..

காலையில் எழுந்திருக்க ஒரு வழக்கமான நேரத்தை அமைத்துக் கொள்வது முக்கியம். இது அறிவாற்றல் செயல்பாட்டை கணிசமாக மேம்படுத்தும். தூக்கத்தின் தரமும் மேம்படும். நாள் முழுக்க கவனம், நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை ஆரோக்கியத்திற்கு சத்தான காலை உணவு முக்கியம். முட்டை, பெர்ரி, நட்ஸ் என ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளவும். இவை அறிவாற்றலை அதிகரித்து, நாள் முழுவதும் மனநிலையை சீராக வைத்திருக்க உதவும்.
News January 12, 2026
ராஜ்யசபா + 30 தொகுதிகள்.. பிரேமலதா கறார்!

தேர்தல் நெருங்கும் நிலையில், தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ராஜ்யசபா சீட்டுடன் 30 தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி என EPS-யிடம் பிரேமலதா கறாராக கூறிவிட்டாராம். தேர்தலுக்கு முன்னதாக ராஜ்யசபா MP-க்களை தேர்வு செய்யும் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதால், தேமுதிகவின் கோரிக்கை குறித்து அதிமுக தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம்.


