News December 28, 2025

₹50 கட்டினால் போதும், ₹35 லட்சம் வரை கிடைக்கும் திட்டம்

image

Post Office-ன் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் தினமும் 19 வயதிலிருந்து ₹50 கட்டினால், 80 வயதாகும் போது அதிகபட்சமாக ₹35 லட்சம் வரை கிடைக்கும். இதில், 55 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். திட்டத்தில் சேர்ந்தவர் மெச்சூரிட்டி தொகையை பெறும் முன் இறக்க நேர்ந்தால், நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News January 9, 2026

புயல், மழை: இன்று 7 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

image

2026-ன் முதல் <<18802928>>புயல்<<>> வங்கக் கடலில் இன்று (ஜன.9) உருவாகக்கூடும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், இன்று திருவாரூர், நாகையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பள்ளி செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோட் உள்ளிட்டவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

News January 9, 2026

சிங்க பெண்களின் ஆட்டம் இன்று தொடக்கம்

image

5 அணிகள் இடையிலான மகளிர் பிரிமீயர் லீக்(WPL) நவிமும்பையில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டியே ஹர்மன்பிரீத் கவுர்(MI), ஸ்மிருதி மந்தனா(RCB) இடையே நடப்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதுவரை MI 2 முறையும், RCB ஒரு முறையும் WPL கோப்பையை வென்றுள்ளன.

News January 9, 2026

ஜனநாயகன் பிரச்னை இன்று முடிவுக்கு வருமா?

image

தணிக்கை சான்றிதழ் சிக்கல் காரணமாக இன்று வெளியாக இருந்த ‘ஜனநாயகன்’ படம் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது. கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயகன் படக்குழுவுக்கு சாதகமாக அமைந்தால் படம் பொங்கலுக்குள் வெளியாக வாய்ப்புள்ளது. உள்நோக்கத்துடனேயே சென்சார் போர்டு செயல்படுவதாக கோர்ட்டில் ‘ஜனநாயகன்’ படக்குழு வாதிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!