News December 28, 2025
₹50 கட்டினால் போதும், ₹35 லட்சம் வரை கிடைக்கும் திட்டம்

Post Office-ன் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் தினமும் 19 வயதிலிருந்து ₹50 கட்டினால், 80 வயதாகும் போது அதிகபட்சமாக ₹35 லட்சம் வரை கிடைக்கும். இதில், 55 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். திட்டத்தில் சேர்ந்தவர் மெச்சூரிட்டி தொகையை பெறும் முன் இறக்க நேர்ந்தால், நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News January 12, 2026
இனி டாக்டருக்கு படிக்க தேவையில்லை.. எலான் மஸ்க்

AI-ன் அதிவேக வளர்ச்சி காரணமாக டாக்டருக்கு படிப்பது பயனற்றதாக மாறும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். இவரது இந்த கருத்து SM-ல் விவாதத்தை கிளப்பியுள்ளது. வரும் காலங்களில் அறுவை சிகிச்சை நிபுணர்களை விட, ரோபோக்கள் சிறப்பாக செயல்படும் என கணித்துள்ளார். மேலும், தற்போது அதிபருக்கு வழங்கப்படும் மருத்துவ சேவையை விட சிறந்த சேவை ஒரு சாமானியருக்கும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்குறீங்களா?

உங்கள் குழந்தை எந்த கஷ்டமும் படக்கூடாது என எண்ணி அவர்களை பொத்தி பொத்தி வளர்க்குறீங்களா? உங்கள் ஓவர் பாசம், பிற்காலத்தில் பெரும் பிரச்னையாக மாறும். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் இந்த உலகத்தில் சர்வைவ் ஆவது கடினமாகிறது. அவர்களுக்கு பிரச்னைகளை எப்படி கையாள்வது, சக மனிதர்களை எப்படி புரிந்துகொள்வது போன்ற அடிப்படை விஷயங்கள் தெரியாமல் போய்விடும். எனவே அவர்களை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க. SHARE.
News January 12, 2026
BREAKING.. விஜய்க்கு நிம்மதி

பொங்கலுக்கு பிறகு விஜய்க்கு மீண்டும் சம்மன் அளிக்க CBI திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் துயரம் தொடர்பாக 2 நாள்கள் விஜய்யிடம் விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விசாரணையில் இருந்து விஜய் விலக்கு கோரியதை CBI ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் சற்று நிம்மதி அடைந்துள்ளார். இன்று <<18837290>>விஜய்யிடம் 4:15 மணி நேரம் விசாரணை<<>> நடத்தப்பட்டது


