News December 28, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

Similar News

News February 3, 2026

கள்ளக்குறிச்சிக்கு புது பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சு!

image

ஏமப்பேர் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய புறநகர் பஸ் நிலையத்தை அமைச்சர்கள் இன்று(பிப்.3) திறந்து வைக்கின்றனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், இந்த புற நகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த பஸ் ஸ்டாண்ட் மக்களுக்கு பயனுள்ளதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

News February 3, 2026

கள்ளக்குறிச்சி: இளம்பெண்ணை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு!

image

வாணாபுரம் அருகே உள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவருக்கும், ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது. பெண்ணிடம் திருமண ஆசை காட்டியதால், இருவரும் தாம்பத்திய உறவில் இருந்தனர். இதனால், கர்ப்பமான பெண், திருமணம் செய்யும் படி கேட்டபோது, அதை மறுத்து பெண்ணை ஆபசமாக திட்டியுள்ளார். இதுகுறித்த புகாரில் ரஞ்சித் குமார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

News February 3, 2026

உளுந்தூர்பேட்டையில் துடிதுடித்து பலி!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே தோளில்லா காலணி தொழிற்சாலையிl வேலை நடைபெற்று வருகிறது. இதில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த்(29) என்பவர் கட்டடத்தில் இருந்து கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பரிசோதனை செய்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர.

error: Content is protected !!