News December 28, 2025
நாமக்கல் ஆட்சியர் பெயரில் போலி கணக்கு!

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பெயரில் சமூக வலைதளமான முகநூலில் போலி கணக்கு உருவாக்கப்பட்டு, அதன்மூலம் நண்பர் கோரிக்கைகள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போலி கணக்கிற்கு பொதுமக்கள் யாரும் பதிலளிக்கவோ, நண்பர் கோரிக்கையை ஏற்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News January 4, 2026
சேந்தமங்கலத்தில் கூண்டோடு விலகிய நிர்வாகிகள்!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குச் சேந்தமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகர் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். இந்த நிகழ்வின் போது, திமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகிய சுமார் 30-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களை சந்திரசேகர் சால்வை அணிவித்து வரவேற்றார்
News January 4, 2026
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தினை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
News January 4, 2026
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தினை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.


