News December 28, 2025
குமரி: தொழிலாளி மீது இளைஞர்கள் தாக்குதல்!

குமரி மாவட்டம், கருங்கல் பகுதியை சோ்ந்தவா் டேவிட்ராஜ் (55). தொழிலாளி. அதே பகுதியை சோ்ந்த கிறிஸ்துராஜ் (25), சபா்ஜேம்ஸ் (23) ஆகிய இருவருக்கும் டேவிட்ராஜுக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் இளைஞர்கள் இருவரும் சேர்ந்து டேவிட்ராஜ்யை தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் இருவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 30, 2025
குமரி: இளைஞருக்கு அரிவாள் வெட்டு!

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த கணேஷ் (26) மற்றும் இவரது நண்பர் சுரேஷுக்கும், கட்டையன்விளையை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கட்டையன்விளை பகுதியில் கணேஷ், சுரேஷ் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த கும்பல் கணேஷ்-ஐ அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இது குறித்து பெனில் (27), ராஜு (29), வினு (31) ஆகிய மூவர் மீது வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News December 29, 2025
குமரி: இழப்பீடு வழங்க எம்.எல்.ஏ வலியுறுத்தல்

அகஸ்தீஸ்வரம் நாடான்குளம் – கொட்டாரம் இடைப்பட்ட பகுதியில் உள்ள பன்றி குன்று குளம் உடைந்து 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை இன்று முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
News December 29, 2025
குமரி: போஸ்ட் ஆபீஸ் வேலை அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30,000 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளூர் மொழியை எழுதவும், பேசவும் தெரிந்த 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <


