News December 28, 2025
சிவகங்கை: டூவீலர் விபத்தில் இளம்பெண் பலி!

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ஆதீஸ்வரன் மனைவி அருள்மொழி (30). இவர் இடைய வலசை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது சாலையில் நின்ற மண் அள்ளும் இயந்திரத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 2, 2026
சிவகங்கை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

சிவகங்கை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன் மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க
News January 2, 2026
சிவகங்கை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

சிவகங்கை மாவட்ட மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் சிவகங்கை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000470, 9445000471 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News January 2, 2026
சிவகங்கை: 10th தகுதி.. ரூ.37,000 சம்பளத்தில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10th படித்தவர்கள் இங்கு <


