News December 28, 2025
தேனி: சிறுமி கர்ப்பம் – இளைஞர் மீது போக்சோ

பெரியகுளம் ஒன்றியம், எண்டப்புளி பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (24). இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை வீட்டில் வைத்து மே மாதம் திருமணம் செய்தார். தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து பெரியகுளம் ஒன்றிய விரிவாக்க அலுவலர் அளித்த புகாரில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் அரவிந்தன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 31, 2025
தேனி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தேனி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் தேனி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000451, 9445000452 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News December 31, 2025
தேனியில் முதியவருக்கு நேர்ந்த சோகம்!

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் சுருளிராஜ் (70). இவருக்கு சுகர், பிரசர் இருந்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு போடியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சுருளிராஜ் வரும் வழியில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (டிச.30) அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News December 31, 2025
தேனி: இ-சேவை, ஆதார் மையங்கள் 2 நாட்கள் இயங்காது

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அனைத்து அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களில் மென்பொருள் பராமரிப்பு மற்றும் தணிக்கை பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (டிச.31) மற்றும் நாளை (ஜன.01) ஆகிய இரண்டு நாட்கள் மேற்படி மையங்கள் செயல்படாது என பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேற்படி, மையங்கள் 02.01.2026 முதல் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


