News December 28, 2025
நாகை: ஆட்டோ திருடியவர் கைது

நாகூர் புதுமனை தெருவை சேர்ந்தவர் முகமது கவுஸ். ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 25-ந் தேதி இரவு தனது வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்தி விட்டு, காலையில் வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் ஆட்டோ இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆட்டோவை திருடிய லட்சுமாங்குடியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் (41) என்பவரை கைது செய்தனர்.
Similar News
News December 31, 2025
நாகை: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1..பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
2.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அவசரக் காலங்களில் பயன்படும் இந்த பயனுள்ள தகவலை உதவும் மனம் கொண்ட நீங்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News December 31, 2025
நாகை: மக்கள் குறைத்தீர் முகாம் – மனுக்களை பெற்ற எஸ்பி

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர் முகாமில், காவல் கண்காணிப்பாளர் சு. செல்வகுமார் பொதுமக்களை நேரில் சந்தித்து 6 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், மனுக்களை காலதாமதமின்றி முடிக்க காவல் நிலைய பொறுப்பு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
News December 31, 2025
நாகை: ரூ.48,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-இல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!


