News December 28, 2025
திருவாரூர்: அரசு அலுவலர்கள் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026 தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வை அலுவலர், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ஆனந்த், திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
Similar News
News December 30, 2025
திருவாரூர்: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்

திருவாரூர், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம்.
News December 30, 2025
திருவாரூர்: வங்கி தொகை உரியவர்களிடம் ஒப்படைப்பு

நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கியில் உள்ள வைப்புத்தொகைகளை தீர்வு கண்டறிந்து உரியவரிடம் ஒப்படைக்க சிறப்பு முகாம்களை நடத்துமாறு, இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. அதன்படி நேற்று திருவாரூர் ஆட்சியர் கூட்டரங்கில், அவ்வாறு உரிமை கோரப்படாமல் இருந்து பணத்தினை விதிகளின் படி உரிய நபர்களிடம் ஆட்சியர் வழங்கினார். இந்த நிகழ்வின்போது வங்கி அதிகாரிகள் உடனிருந்தனர்.
News December 30, 2025
திருவாரூர்: வங்கி தொகை உரியவர்களிடம் ஒப்படைப்பு

நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கியில் உள்ள வைப்புத்தொகைகளை தீர்வு கண்டறிந்து உரியவரிடம் ஒப்படைக்க சிறப்பு முகாம்களை நடத்துமாறு, இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. அதன்படி நேற்று திருவாரூர் ஆட்சியர் கூட்டரங்கில், அவ்வாறு உரிமை கோரப்படாமல் இருந்து பணத்தினை விதிகளின் படி உரிய நபர்களிடம் ஆட்சியர் வழங்கினார். இந்த நிகழ்வின்போது வங்கி அதிகாரிகள் உடனிருந்தனர்.


