News December 28, 2025
திண்டுக்கல்: வாடகை வீட்டில் இருப்பவரா நீங்கள்?

திண்டுக்கல் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)
Similar News
News January 2, 2026
ஆயக்குடியில் தெரு நாய் கடித்து இரண்டு பேர் காயம்

ஆயக்குடி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி வருகிறது. இன்று மதியம் 1 மணி அளவில் இரண்டு பேரை நாய் கடித்து குதரி உள்ளது. காயமடைந்த அவர்கள் பழனி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையை பெற்று வருகின்றனர். உச்ச நீதி மன்றம் உத்தரவுப்படி தெரு நாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது
News January 2, 2026
திண்டுக்கல்: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு இங்கு <
News January 2, 2026
குஜிலியம்பாறை அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல், குஜிலியம்பாறை ஆலம்பாடி ஊராட்சி காடமநாயக்கனூரைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் வினோத் (23). அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன், ஆர்.வெள்ளோடு – பிச்சனாம்பட்டி ரோட்டில் காரை ஓட்டிச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து காடமநாயக்கனூர்டி முத்துச்சாமி காடு அருகே கார் கவிழ்ந்தது. இதில் வினோத் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


