News December 28, 2025
தீபத்துாண் விவகாரம் மக்கள் மனதில் எரிகிறது: நயினார்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் CM ஸ்டாலின் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தீபத்தூண் தடை மக்கள் மனதில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளதாக கூறிய அவர், தீபம் ஏற்ற வேண்டும் என்பதில் அப்பகுதிப் பெண்கள் மிக உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டார். இந்த விவகாரம் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டங்கள் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அவர் கூறினார்.
Similar News
News February 4, 2026
CM ஸ்டாலின் எனது நண்பர்: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் என 2 லட்சம் பேர் வீதியில் இறங்கிப் போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். காலமுறை ஊதியம் வழங்கப்படும் என அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக ஏமாற்றியுள்ளதாகவும் சாடியுள்ளார். அதேசமயம் CM ஸ்டாலின் தனது நண்பர்தான், ஆனால் நிர்வாகம் சரியில்லை என்பதே தன்னுடைய விமர்சனம் என கூறியுள்ளார்.
News February 4, 2026
உலக புற்றுநோய் தினம் இன்று!

உலக புற்றுநோய் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருளான ‘United by Unique’, ஒவ்வொரு புற்றுநோய் பாதிப்பும் தனித்துவமானது என்பதை வலியுறுத்துகிறது. நாள்பட்ட இருமல், தலைவலி, உணவு விழுங்க சிரமம், சரும மாற்றங்கள், தொடர்ச்சியான சோர்வு, அடிக்கடி காய்ச்சல், காரணமற்ற எடை இழப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
News February 4, 2026
விஜய் இப்படி சொல்லலாமா? TTV தினகரன்

‘அதிமுகவை ஊழல் கட்சி’ என்று விஜய் கூறுவது தவறு என TTV தினகரன் கூறியுள்ளார். தனது ரோல் மாடலாக MGR, ஜெ.,வை கூறிவிட்டு, செங்கோட்டையனையும் விஜய் சேர்த்துக்கொண்டதை குறிப்பிட்டு பேசிய அவர், சுற்றியிருப்பவர்கள் சொல்வதை மட்டும் கேட்காமல் அவர் கொஞ்சம் வெளியே வந்து பார்க்கவேண்டும் என்றார். மேலும், விஜய் தங்களுக்கு எதிரி அல்ல எனவும் தங்களது ஒரே எதிரி திமுகதான் என்றும் அவர் கூறியுள்ளார்.


